Jan 3, 2016

18. 'Open the door. Let the divine fragrance spread, O' Devi.' #Tiruppavai #krishnafortoday

1 comment:

Kalpakam said...

களிப்பூறும் மிகு கேளிக்கையாய்
பிளிரும் வாரணம் அடக்குபவனாய்
கண்ணனைக் காக்கும் கவசமாய்
திண்தோள்கள் உடையவனான
நந்தகோபன் மருமகள் நங்காய் !

விழித்து அருணன் எழும் முன்
கோழிகள் கூவல் கேட்கவில்லையா?
மாடத்துப் பந்தலில் வட்டமிடும்
கூட்டமாய்க்குயில் எழுப்பும் ஒலி
தவசிகளின் மறைநாதமாய்
செவியேற்கவில்லையா?

நறும் மணம் கமழ் நீண்ட
கருங்கூந்தல் எழிலரசியே !
அன்றலர் செங்கமல இதழ்
போன்ற சிலிர்க்கும் வளையல்
குலுங்கும் மென் கரங்களால்
வாயில் கதவம் திறப்பாய்
எம்மோடு கலந்து உவந்து
உம்மை என்றும் பிரியாதவ்ன்
மேன்மை பாடிமகிழ்வோமாக !