Dec 23, 2015

7. Kesava. #Tiruppavai #krishnafortoday 

1 comment:

Kalpakam said...

கங்குல் கரையும் நேரமதில்
கலையா ஆழ் உறக்கமதில்
கண்ணன் கழலடி அணத்ததில்
கரையா பெரு இன்பமதனில்
கருத்தும் மதியும் மயங்கினதில்
பேடையோடு ஒலியெழுப்பும்
குருவிகள் குரல் கேட்டாளில்லை
வளையல்கள் சலசலத்துக் குலுங்குட
காசுமாலை அச்சுமாலை அசைந்தாட்
நறுமணம் கமழ் நிறைகுழல் ஆய்ச்சியர்
கடைந்த தயிரோசை கேட்டாளில்லை
தெவ்வர் தமை எதிர்த்து நின்று
அவுணர் கேசியை அழித்தொழித்த
கேசவன் நாமம் கேட்டாளில்லை
வாசற்கதவைத் திறந்து வெளிவந்து
ஆசையுடன் ஒளிர்முகம் காட்டுவாய்