Dec 20, 2015

4. Monsoon, the measure of prosperity. #Tiruppavai #krishnafortoday 

1 comment:

Kalpakam said...

மழைக்குரிய தேவதையே- உன்னில்
எழில்நிறை கடல்வண்ணனுரு கண்டோம்
பண்டொருநாள் நான்மறை காக்க
மீனுருவமாய் ஆழ்கடல் புகுந்த திருமாலின்
திருமேனியொக்கும் கருமேகம் திரட்டி
திருகரமேந்திய சக்கரம் போல் மின்னி
மற்றொரு கரமேந்திய சங்குபோல் முழங்கி
சார்ங்கம் தொடுக்கும் அம்புசரங்களாய் பாய்ந்து
பெருங்கடல் புகுந்து,நீரை முகந்து
ஆரவாரமாய் வானம் உட்புகுந்து
பருவத்தே மிதமாய்ப் பொழிந்து
நோன்பு நோற்கும் நாங்கள் ம்கிழ்ந்து
நன்முறையில் நிறைவு செய்ய அருளுக
என்று பாசுரம் பாடி கிள்ளை பின்தொடர
இறைஞ்சிவேண்டும் கோதையுடன் சேருவோம்